Tuesday, October 17, 2006

அமெரிக்காவிற்கு தலையாய கடமை

சமீபத்திய செய்திகளை கேட்டால் வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கும் காரணம் ஒரு காலத்தில் தினமல(ம்)ர் போன்ற பத்திரிக்கைகளெல்லாம் அமெரிக்காவிடம் அப்படி ஆயுதம் உள்ளது இப்படி ஆயுதம் உள்ளது என்றெல்லாம் அதாவது ஒரு சேட்லைட் பூமிக்கு மேலே சுற்றுகின்றது அது பாறைக்கு அடியில் யாராவது பதுங்கி இருந்தாலும் அதன் வெப்ப அளவை கணக்கிட்டு அது மனிதனின் வெப்பமா? அல்லது வேறு மிருகங்களின் வெப்பமா? என்றுகூட கணக்கிட்டு செய்தி அனுப்பும் என்றெல்லாம் மாயாவி படம் போல ரீல் விட்டு இருந்தது. ஆனால் அது உண்மையிலேயே ரீல்தான் என்பதை உலகம் ஒவ்வொரு நாள் விடிந்ததும் புரிந்துகொண்டேதான் உள்ளது அமெரிக்காவிற்கும் பிணங்களான அதன் அடிவருடிகளுக்கும் மட்டும் வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம் ஆனால் உலகம் உயிருடன் தான் இருக்கின்றது என்பதற்கு தினமும் வெளியாகும் பத்திரிக்கை செய்திகளே சாட்சி. அதற்கு துள்ளியமான ஒரு உதாரணம்தான் சமீபத்திய செய்தி அதாவது உஸ்ஸாமா பின் லாடன் இறந்து விட்டார் உலகைக்குழுக்கும் இந்த செய்திதான் அது. உஸ்ஸாமா இருக்கின்றாரோ இல்லையோ ஆனால் அவர் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்வது அமெரிக்காவிற்கு நிர்பந்தம். உஸ்ஸாமா இறந்து விட்டார் என்று அமெரிக்கா ஒத்துக்கொண்டால் அதன் மறுபுறத்திலிருந்து பிறகு உனக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வியையும் அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டிவரும். அ ப்படி மக்கள் கேட்டுவிட்டால் தங்களின் கூலிப்படைகளை ஆப்கானின் மலைப்பகுதிகளில் நிறுத்திக்கொண்டு ஆசியாவின் எதிர்கால வல்லரசாக உருவாக இருக்கும் இந்தியாவையும் சீனாவையும் வேவு பார்ப்பது எப்படி. அதனால் உஸ்ஸாமா பின் லாடன் இறக்கவில்லை என்று மூச்சு முட்ட கத்தவேண்டிய தலையாய கடமை அமெரிக்காவிற்கும் அதன் எச்சி இலை பொருக்கிகளுக்கும் உள்ளது.

ஆர் எஸ் எஸ் தலைவர் தயாரா

நம்ம RSS ன் தலைவரு பாகிஸ்தான் தான் மும்பையில் குண்டு வைத்தது என்று காங்கிரஸ் சொல்கின்றதே அப்படி என்றால் அந்த நாட்டை ஏன் தீவிரவாதி நாடு என்று காங்கிரஸ் அறிவிக்கக்கூடாது கண்டிப்பாக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தான் எல்லா வகையான உதவியும் செய்து அண்டை நாடான இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க உதவுகின்றது அதனால் இந்தியா பாகிஸ்தானை தீவிரவாத நாடு என அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்காரு. அதுசரி பாகிஸ்தனை தீவிரவாதி நாடாக அமெரிக்காதான் உருவாக்குகின்றது என்றால் அந்த அமெரிக்காவை ஏன் தீவிரவாத நாடு என்றும் தீவிரவாதத்திற்கு உதவிசெய்கின்ற நாடு என்றும் சொல்லக்கூடாது அப்படி RSS தலைவரு சொன்னார் என்றால் இந்த அப்புக்குட்டியும் RSS தலைவரு கூட சேர்ந்து போராட தயார் RSS தலைவரு தயாரா??

வந்தது புறா அல்ல கழுகு

சமீபத்தில் அமெரிக்காவின் தாதா மனித சமூக விரோதி மனிதன் என்று சொல்வதற்கு எல்லளவும் எல் முனையளவும் தகுதியில்லாத இரத்தக் காட்டேரி பிணம் தின்னிக் கழுகு புஷ் அவர்கள் இந்தியா வந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே வேறு நாட்டின் பெரிய அரசியல் தலைவர்கள் நம் நாட்டிற்கு வருவதும் நம் நட்டின் தலைவர்கள் வெறொரு நாட்டிற்கு போவதும் சகசம்தான் இயல்புதான். அப்பொழுதுதான் ஒரு நாட்டின் பொருள் வேறொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி செய்யவும் நாடுகளுக்கிடையில் பந்தம் ஏற்படவும் வசதியாக இருக்கும் இதற்கெல்லாம் நமக்கு எந்த தடையுமில்லை. ஆனால் யாரை வரவைப்பது யாருடன் சொந்தம் கொள்வது இதைத்தான் நாம் ஆராய வேண்டும். ஏனென்றால் நம்முடைய நாட்டிற்கென்று ஒரு மதிப்பும் மரியாதையும் வெளியில் உள்ளது வந்தது ஏன் ஆசியா கண்டத்திலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் உச்சியில் இருப்பது சீனா ஆகும் இன்னும் பத்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி எங்கோ சென்றுவிடும் சீனாவின் பொருள்கள் ஏற்றுமதி செய்யாத எந்த நாடும் இல்லை என்று கூறுமளவுக்கு அந்த நாட்டின் பொருள்கள் உலக நாடுகள் அனைத்திலும் வியாகிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிற்கு தலை வழியாகவே இருந்து வருகின்றது. உலக நாடுகளின் தாதாகிரி நான்தான் என கூறிக்கொண்டு இருக்கும் பொழுது இன்னொறு நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்து வருவதை இந்த இழிமதி கொண்டவர்கள் எப்படி சகிக்க முடியும் அதற்குத்தான் இந்த குள்ள நரிகளின் இந்தியா வருகை. சமீபத்தில் அதாவது ஆப்கான் யுத்தம் நடக்கும் பொழுது அமெரிக்கா சீனாவிற்கு சீனாவின் மிலிடரிக்கு இரண்டு ஏர் விமனம் கொடுத்தது அதில் மைக்ரோ போன்களை தெரியாமல் வைத்து கொடுத்தது மிலிட்டரி கமாண்டர்கள் என்ன பேசுகின்றனர் என ஒட்டு கேட்பதற்காக இதை கண்டுபிடித்துவிட்ட சீனா அரசாங்கம் அந்த இரண்டு விமானத்தையும் எறித்துவிட்டது சமீபத்தில் பறவை நோய் ஆசியாவில் தான் பரவுகின்றது அதனால் ஆசியாவின் பொருட்களை வாங்கவேண்டாம் எனவும் பிரச்சாரம் நடக்கின்றது இப்படியெல்லாம் சீனாவிற்கு எதிராக என்னென்னவோ சதியெல்லாம் செய்து தோற்றுவிட்ட அமெரிக்காவின் கடைசி முடிவு தான் இந்தியா வருகை அதாவது சீனாவை பொருளாதார ரீதியாக அமுக்க வேண்டுமென்றால் அந்த நாட்டில் எந்த அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகின்றதோ அந்த அளவுக்கு வேறொரு நாட்டிலும் உற்பத்தி செய்தால் தான் சீனாவின் பொருளாதாரத்தை நசுக்க முடியும் அதற்கு ஆசியா கண்டத்திலேயே இந்தியாவைத் தவிர வேரு நாடு இல்லை ஏனென்றால் 105 கோடி மக்கள் தொகை வரக்கூடிய இந்தியாவில் 85% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ளவர்கள். அதனால் உலக வங்கியும் அமெரிக்காவும் சேர்ந்து தொழிலுக்கு உதவி செய்தால் பொருளாதார விற்பனை ரீதியாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போட்டி பொறாமை ஏற்படும் அதற்கு இடையில் இருந்து கொண்டு இரத்தம் குடிக்கவே அமெரிக்கா விரும்புகின்றது. அதற்கான வலைவிரிப்புதான் இந்தியா வருகை ஆக வந்தது சமாதான புறா அல்ல பிணம் தின்னும் கழுகு என்பதை சாதாரண மக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது அரசியல் நிபுணர்களின் கனிப்பாகும்

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்

2006 மார்ச் மாதம் ஏகத்துவம் மாத இதழில் 24ம் பக்கம் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு என்னை அதிரவைத்த பதில் இருந்தது அதை படித்து நான் உண்மையிலேயே அதிர்ந்துவிட்டேன் என்னை அதிரவைத்த அந்த சம்பவத்தை அப்படியே தருகின்றேன் ? பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடம் நிதியுதவி பெற்றுக்கொள்ளலாமா? குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும். குத்புதீன் எஸ். எஸ் நல்லூர் பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடம் நிதி பெற்றுக்கொள்வதற்கு எந்தத் தடையுமில்லை. நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅ பாவின் அருகிலுள்ள ஒரு சுவரைப் பற்றி ''இது கஅ பாவில் சேர்ந்ததா? என்று கேட்டேன் அதற்கு ஆம் என்றார்கள் எதற்காக இதை அவர்கள் கஅபாவோடு இணைக்கவில்லை? என்று நான் கேட்டேன் அதற்கவர்கள் உன் சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான் என்று பதிலளித்தார்கள் கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதன் காரணம் என்ன? என்று நான் கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு வெண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால் அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவில் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் : புஹாரி 1584 பள்ளிவாசல்களிலேயே மிக அந்தஸ்து வாய்ந்த முதல் ஆலயமான கஅபத்துல்லாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன் மக்காவிருந்த முஸ்லிமல்லாதவர்கள் தான் புனர் நிர்ணயம் செய்துள்ளார்கள் கட்டுமானத்தில் அந்த மக்கள் செய்த தவறுகளைச் சரிசெய்திருப்பேன் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்களே தவிர அவர்கள் கஅபாவைக் கட்டியதே தவறு என்று கூறவில்லை. எனவே பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடம் நிதி பெறுவது தவறில்லை என்பதை இதிலிருந்து அறியலாம். என சரித்திரப்புகழ் பெற்ற ஃபத்வாவை தந்துள்ளனர் ஏகத்துவ ஏட்டினர் நான் கேள்விப்படுள்ளேன் நுபுபத்திற்கு முன்பு மக்கத்து குறைஷிகள் ஒன்றுகூடி பழுதாகியிருக்கும் கஅபத்துல்லாவை புனர்நிர்ணயம் செய்யவேண்டும் என முடிவுசெய்து அதற்கு பணம் எப்படி திரட்டவேண்டும் என்று முடிவு செய்யும்போது கஅபாவை கட்டுவதற்காக வசூல் செய்யப்படும் பணத்தில் வேசிகளிடம், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் மேலும் சமூகத்தில் தவறான வழியில் பணம் சம்பாரிப்பவர்களிடம் கஅபாவை கட்டுவதற்காக வசூல் செய்யக்கூடாது என முடிவு செய்தார்கள் (ஹதீஸ் தெரியது) (அதனால் தான் அந்தச் சமூகத்தில் பெரும் பணக்காரர்கள் இருந்தும் கஅபாவை முழுமையாக கட்டமுடியாமல் பாதியிலேயே முடித்துவிட்டனர்) என்று நான் கேள்விப்பட்டுள்ளேன் சில சந்தேகங்கள் அதாவது முஸ்லிம் அல்லாதவர்களிடம் பள்ளிகட்ட வசூல் செய்கின்றோம் நம் நாடோ முஸ்லிமல்லாதவர்கள் அதிகம் வாழக்கூடிய நாடு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவருமே முஸ்லிமல்லாதவர்கள் தான் ஒருவெளை முஸ்லிமல்லாத ஒரு சகோதரர் நாங்கள் கோயில் கட்டப்போகின்றோம் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் என ஒரு முஸ்லிமிடம் கேட்டால் உதவி செய்யுங்கள் என்று இவர்கள் பதில் சொல்வார்களா? அப்படி உதவி செய்தால் அது தீமைக்கு துணை போனதாக ஆகாதா? அல்லது கோயில் கட்ட பணம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னால் எங்களிடம் மட்டும் பணம் கேட்கின்றாய் நீயேன் கொடுக்க மறுக்கின்றாய் என்று நண்பர்களிடம் மனக்கசப்பு வராதா? அல்லது அவர்களிடம் பேசாதீர்கள் அவர்களுக்கு சலாம் சொல்லாதீர்கள் அவர்கள் யகூதிகளைவிட மோசமானவர்கள் என்று ஒதுங்கிக்கொள்வார்களா? ஒருவேளை சில காலங்களுக்கு பிறகு (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் ) இந்த பள்ளியில் எங்களுக்கும் உரிமை உள்ளது நாங்களும் நன்கொடை கொடுத்துள்ளோம் என்று சில மாற்றுமத சகோதரர்கள் சொன்னால் பரவாயில்லை ஒரு மூலையில் கணபதியின் சிலையை வைத்துக்கொள்ளுங்கள் (நவுதுபில்லாஹ்) என்று அறிவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள் சொல்வார்களா? பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பதற்கு நவீன சான்று. இந்த சிறியவனின் அறிவுரை உமர் (ரலி) அவர்கள் பாலஸ்தீனை வெற்றிகொண்டபோது அஸர் தொழுகை நேரமானது உமர் (ரலி) அவர்களும் சகாப்பாக்களும் தொழுகைக்காக ஆயத்தமாகின்றார்கள் அப்பொழுது அந்த கிறிஸ்தவ பள்ளியின் பாதிரியார் உமர் அவர்களே உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஆலயத்திலேயே தொழுங்களே என்று கேட்கின்றார்கள் அதற்கு உமர் (ரலி) அவர்கள் இல்லை நான் இன்று தொழுதுவிடுவேன் ஆனால் நாளை வரக்கூடியவர்கள் இது எங்கள் தலைவர் உமர் தொழுத இடம் அதனால் எங்களுக்கு சொந்தம் என்று சொந்தம் கொண்டாடி விடுவார்கள் என்று கூறி பள்ளிக்கு வெளியிலேயே தன் சஹாப்பாக்களோடு உமர் (ரலி) அவர்கள் தொழுதார்கள் என்பது சரித்திர சான்றாகும். மேலும் இது சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் தூரத்து பார்வையாகும். குறைந்தபட்சம் இதையாவது சிந்திக்கவேண்டாமா?

ஆர் எஸ் எஸ் இன் ஆதிக்கம்

அன்பார்ந்த சகோதரர்களே கடந்த நாட்களுக்கு முன்பு லெட்டர் பாம் வைத்து போஸ்ட் ஆபீஸையும் காவல் துறையையும் கதிகலங்கச் செய்தார் என்ற பெயரில் கேரளாவில் முஹ்ஸின் என்ற ஒருவரை கேரளா போலிஸ் அரஸ்ட் செய்தது ஆனால் அவருக்கும் லெட்டர் பாம் விஷயத்துக்கும் சம்பந்தமில்லை என்று அவரை விடுவித்தது ஆனால் அதைத்தொடர்ந்து சர்மா என்ற ராஜிவ் என்பவரை நேற்று அரஸ்ட் செய்தது. மேலும் அவருடைய அறையிலிருந்து இஸ்லாமிய சின்னங்கள் கொண்ட வரைபடங்களையும் பிடித்துள்ளது போலிஸ். அரஸ்ட் செய்ததும் விசாரித்தது நமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை ஆனால் அதைத்தொடர்ந்து வந்த போலிஸ் அறிக்கைதான் நம்மை ஆச்சரியத்தில் ஆக்கியது. என்னவெனில் அவருக்கு தீவிரவாதத்தில் எந்தப் பங்கும் இல்லையாம் அவர் தனிப்பட்ட முறையில் தான் வைத்தாராம் யாரோடான முன் பகையும் இல்லையாம். கேரள முன்மந்திரிகள் குஞ்சாலிக்குட்டி மற்றும் பேபி ஜோன் ஆகியோரையும் இந்த லெட்டர் போம் மூலம் கொல்ல திட்டமும் இருந்ததாம். நான் கோடிட்டு காட்டிய விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு அவருடைய இந்த மாபாதக செயலை நியாயப்படுத்துகின்றது போலிஸ். அதாவது இவர் செய்ய இந்த செயலின் மூலம் 1) தபால் துறையின் செயலற்ற தன்மையை காட்டியுள்ளதாம். 2) தவறு செய்தவர்களுக்கு (அதாவது இந்த மந்திரிகள் இருவரும் பெண் கேஸில் விவாதத்தில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) தண்டனை கிடைப்பதில்லை அதனால் இவர்போன்ற இளைஞர்கள் கொதித்துள்ளனராம். இவை மீடியாவும் போலிஸும் தரும் நொண்டி வாதமாகும். ஆனால் ஆர் எஸ் எஸ் இன் கடந்த கால சரித்திரத்தை பார்த்தால் இந்த சம்பவத்தையும் அத்தோடு இணைத்துத்தான் பார்க்கமுடியும். மகாத்மா காந்தியை இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு சுட்டுக்கொன்றது முதல் ஒட்டுத்தாடி வைத்துக்கொண்டு பாம்பே இரயில் குண்டுவெடிப்பு சம்பவம் (இழுவையில் உள்ளது) வரை அவர்களின் சரித்திரம் இப்படி இருக்கையில் போலிஸ் ஏன் அந்தப்பக்கமே சிந்திப்பதில்லை என்று தான் தெரியவில்லை இதிலிருந்து காவல்துறையிலும் காவி புகுந்துவிட்டது என்று மீண்டும் சாதாரண மக்கள் சிந்திக்கத்தூண்டுகின்றது. தீவிரவாதிகள் உருவாவதில்லை சமூகத்தால் உருவாக்கப்படுகின்றனர் இதை ஏன் கூறுகின்றேன் என்றால் இந்தியாவில் என்ன சம்பவம் நடந்தாலும் ஏன் உலகிலேயே எது நடந்தாலும் போலிஸ் துறையும் விசாரணை துறையும் முதலில் தங்களின் தூசி படிந்த கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்ப்பது முஸ்லிம்களைத்தான். இந்தப்போக்கு மாறாதவரை ஒரு சமூகத்தாரை மட்டும் குற்றவாளிக்கூண்டில் நிருத்தும் வரை தீவிரவாத எதிர்ப்புச்சட்டம் ஒரு செல்லாக்காசுதான்

நிறவெறியின் உச்சத்தில் அமெரிக்கா!

அண்ணாத்தே நம்ப தமிழுலே கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்னு ஒரு பழமொழி உண்டு அது எந்த அளவுக்கு உண்மென்றது இதெ படிச்சா தெரியும் என்ன செய்ய போங்க அருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்...... உதய் மேனன்... ஜே.பி. மார்கன் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவி வகிப்பவர். கடந்த வாரம் மேனன் தனது நிறைமாத கார்ப்பிணி மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு, தன் கைக்குழந்தையையும் எடுத்துக் கொண்டு, நியூயார்க்கில் பிரபலமான 'பிராட்வே ஷோ' எனும் மியூஸிகல் நிகழ்ச்சிக்குச் சென்றார். கௌண்ட்டரில் மேடைக்கு அருகே ஸீட் வேண்டும் என்று கேட்ட உதய் மேனனை 'ஒரு நிமிடம்' என்று காத்திருக்கச் சொல்லிவிட்டு, கௌண்ட்டரில் இருந்த பெண்மணி உள்ளே சென்றாள். தான் கேட்டபடி டிக்கெட் கொடுக்க யாரிடமோ அனுமதி வாங்கப் போயிருக்கிறாள் என்று பார்த்தபோது, அவள் வந்தது நான்கு போலீஸ்காரர்களுடன். 'ஹேண்ட்ஸ் அப்' என்று கூச்சலிட்டபடியே மெஷின் கன் சகிதம் வந்த நியூயார்க் போலீஸார், மேனனைக் கீழே புரட்டித் தள்ளி கைகளை முதுகுக்குப் பின்னால் வைத்து விலங்கு போட்டனர். மனைவியும், கைக்குழந்தையும் அலறியபடியிருக்க, தியேட்டரில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒடிவந்து பார்த்தனர். மேனனை சட்டை பாண்ட் கழற்றி சோதித்த போலீஸார் கைகளில் கிடைத்தது, அவர் கம்பெனியின் அடையாள அட்டையும், பர்ஸும்தான். அதைப் பார்த்தபிறகு அவர் முகத்தில் அவற்றை வீசியெறிந்த போலீஸார், விலங்கை கழற்றிவிட்டனர். கௌண்ட்டர் பெண்மணி அவரை மனித வெடிகுண்டு என்று தவறாக போலீஸில் சொன்னதுதான் இத்தனை கொடுமைக்கும் காரணம். கண்களில் நீர் வடிய, ''இருபது வருடமாக நியூயார்க்கில் வசிக்கிறேன். திடீரென்று என்னை ஒரு குற்றவாளியாகப் பார்த்துவிட்டார்களே! இந்தியாவிலிருந்து வந்தாலும், அமெரிக்க குடியுரிமை பெற்ற எனக்கு இதுதானே தாய்நாடு! தாயே வேண்டாம்'' என்கிறார் உதய் மேனன். சுக்விந்தர் சிங்... ஒரு இளம் தொழிலதிபர். தனது கடுமையான உழைப்பினால் இளம் வயதிலேயே கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். மெர்சிடைஸ் பென்ஸ் கார், பத்து ஏக்கர் வீடு என்று அமெரிக்காவில் வாழ்பவர். கடந்த வாரம் இவர் வேலைநிமித்தமாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. டிக்கெட் கௌண்ட்டரில், முதல் வகுப்பு டிக்கெட் கேட்டவர், 'காலை நீட்டிக்கொண்டு சௌகரியமாக உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் முதல் வரிசையில் ஸீட் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று கேட்டிருக்கிறார். அது பைலட்கள் அமரும் 'காக்பிட்'டுக்கு மிக அருகேயுள்ள ஸீட். சுக்விந்தர் சிங்கின் இந்த கோரிக்கையுடன், அவரை ஏற இறங்கப் பார்த்தபடி எழுந்து போனார் கௌண்ட்டர் நபர். திடீரென்று அதிரடிப் படையினர் ஓடிவந்து அவரை மடக்கி, டர்பனை கழற்றச் சொன்னார்கள். 'ஸாரி, அது என் மதத்துக்கு விரோதமானது' என்று பணிவாக அவர் கூறும்போதே டர்பனைப் பிடுங்கி அவருடைய நீண்ட தலைமுடிக்குள் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை போட தொடங்கினார்கள். ஆறடி உயரக் கூந்தல் அலைபுரள... அமெரிக்க அதிரடிப் படையினர் மிரண்டுபோய், 'ஏய்! நீ ஆணா, பெண்ணா? அதைச் சொல் முதலில்' என்று மிரட்டியபடியே, மோப்ப நாயை வரவழைத்தனர். அவர் பெட்டிகளைச் சோதித்து முடித்துவிட்டு, தப்பாக ஏதும் இல்லை என்று புரிந்துகொண்டு, 'ஏன் மேன்.. ஏன் இவ்வளவு பெரிய தலைப்பாகை கட்டி எங்கள் உயிரை எடுக்கிறாய்? உடனே நல்ல சலூனாகப் பார்த்துப் போ' என்றபடி புடவை நீளத்துக்கு இருக்கும் டர்பனை அவர் முகத்தில் விட்டெறிந்துவிட்டு நகர்ந்தார்கள். இந்தியா, சீக்கிய மதம் இது பற்றியெல்லாம் அதிகம் அறிந்து வைத்திராத அமெரிக்கப் பயணிகள் பலரும் சுக்விந்தர் சிங்கை ஏதோ ஒஸாமா பின் லேடனைப் பார்ப்பது போல் பார்க்கவும், கூனிக்குறுகிப் போன சுக்விந்தர், கவிந்த தலை நிமிராமல் வீடு போய்ச் சேர்ந்தார். இப்போது மன அழுத்தம் மற்றும் பிளட் பிரஷருக்கு வைத்தியம் செய்துகொள்கிறார். ஹைதர் ரிஸ்வி.. இவர் இந்தியர் அல்ல, பாகிஸ்தானி. இவர் ஒரு ஜர்னலிஸ்ட்... ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற ஜர்னலிஸ்ட். வளர்த்தியாகத் தாடி வைத்திருக்கும் அவரை சூப்பர் மார்க்கெட்டில் 'ஒஸாமா பின் லேடனின் கையாள்' என்று கூக்குரலிட்டபடி சூழ்ந்துகொண்ட சிலர், நையப் புடைந்துவிட்டனர். பற்கள் உடைந்து, எலும்பு முறிவுடன் ஜஹதர் ரிஸ்வி இப்போது நியூயார்க் ஆஸ்பத்திரியில். ஆயிஷா பேகம்.. இந்தியாவைச் சேர்ந்த பட்டதாரி இவர். பர்தா போட்டுதான் அமெரிக்காவில் எங்கும் வெளியே போவார். சமீபத்தில் சில இளைஞர்கள் அவர் பர்தாவை கழற்றி சில்மிஷம் செய்தார்கள். இவ்வளவையும் போலீஸார் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்தனர். மனது உடைந்துபோன ஆயிஷா தற்கொலை முயற்சியில் இறங்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வேலைக்குப் போகாமல் இப்போது வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். அபிஷேக்.. பத்தே வயதான பள்ளி மாணவன். அமெரிக்காவில் பிறந்ததால் இந்த நாட்டுக் குடிமகன். பள்ளியில் மற்ற பசங்கள் இந்தியாவைச் சேர்ந்த இவனை 'டெரரிஸ்ட்' என்று கேலி செய்யவே, அவமானம் ப்ளஸ் பயம் பெருக்கெடுக்க.. பள்ளிக்குப் போவதையே நிறுத்திக் கொண்டு ஜுரத்தில் படுத்துக் கிடக்கிறான். இது மேற்சொன்னவர்களுக்கு மட்டும் நேர்ந்த அனுபவமல்ல.. அமெரிக்காவில் தினம்தினம் சகஜமாகிக் கொண்டிருக்கிறது இந்த சித்ரவதை. ரயிலில், பஸ்ஸில், நடுத்தெருவில் திடீர் திடீரென தெற்காசிய நாட்டுப் பூர்வீகம் கொண்டவர்களையும் அந்த நாடுகளிலிருந்து சமீபத்தில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்களையும் இப்படிக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள். சொல்லப் போனால், பிரௌன் கலருடைய அனைத்து ஆசாமிகளுக்குமே இப்படிச் சோதனைதான். போலீஸாரின் கண்களுக்கு இவர்கள் அனைவரும் டெரரிஸ்ட்டுகள்தான். விமானங்களில் நீண்ட நாட்களுக்கு முன்பே புக் செய்து, 'கன்ஃபர்ம்டு' டிக்கெட் வாங்கி ஏறி உட்காரும் தெற்காசியர்கள் பலர், விமானியினால் இறக்கி விடப்படுகிறார்கள். கேட்டால், ''உங்களுடன் டிராவல் செய்ய மற்ற பயணிகள் (வெள்ளையர்கள்) பயப்படுகிறார்கள். ஸாரி, பணத்தை வாபஸ் தருகிறோம்'' என்பதே பதில். பயணி இறங்க மறுத்தால், அந்த விமானி விமானத்தை எடுக்காமல் உடல்நலக் குறைவு என்று லீவில் போய்விடுகிறார். விமான கம்பெனிகளும் நஷ்டத்துக்குப் பயந்து பயணியை இறக்கிவிடுகின்றன. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிறவெறி ஆதிக்க கற்காலத்தை நோக்கி அமெரிக்கா மறுபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலைமை. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நியூயார்க் இலக்கான பின்னர், யாரைக் கண்டாலும் பயந்து நடுங்குவது ஒருபக்கம் என்றால், 'எங்கள் நாட்டில் ஒண்டிப் பிழைக்க வந்துவிட்டு, எங்களுக்கே அழிவு உண்டாக்கப் பார்க்கிறீர்களா' என்ற கண்மூடித்தனமான ஆத்திரமும் அவர்களது கண்களை மறைக்கத் துவங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் நடந்த நிற வெறித் தாக்குதல் உட்பட, உலகின் எந்த மூலையில் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் ஓடோடி வந்து அதைக் கண்டிக்கும் அமெரிக்கா, இப்போது தானே நிற வெறி ஆதிக்கத்துக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறது. நியூயார்க் ரயில்களில் தெற்காசியர்களின் ஸீட்டுக்குப் பக்கத்து ஸீட்டில் அமரக்கூட பயப்படும் வெள்ளையர்களைப் பார்க்க முடிகிறது. அச்சத்தில் உருவான தீண்டாமை! இதேபோல், நேற்றுவரை தெற்காசியர்கள் நடத்திவரும் ஓட்டல்களுக்கும் கடைகளுக்கும் விரும்பிப் போய்க் கொண்டிருந்த அமெரிக்கர்கள், இப்போது காத தூரம் ஓடுகிறார்கள். அமெரிக்காவில் தனி நபர் வருமானம் என்று பார்த்தால் சீனர்கள், யூதர்கள் மற்றும் இந்தியர்களுக்கே அதிகம். குறிப்பாக இந்தியாவிலிருந்து கம்ப்யூட்டர் துறையினர், டாக்டர்கள், விஞ்ஞானிகள் என்று மெத்தப் படித்தவர்கள் இங்கே குடியுரிமை பெற்று, மற்ற இனத்தவரைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள். பெரிய வீடுகளையும், புதிய கார்களையும் இந்தியர்கள் வாங்கும்போது, மற்றவர்களின் கண்களை இது குத்துகிறது. டெக்ஸாஸ் மாநிலத்தில் கடந்த ஆண்டு சில கம்ப்யூட்டர் நிபுணர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தபோது, குடியுரிமை அதிகாரிகள் பொறாமை தாளாமல் சில வார்த்தைகளை வெளியே விட்டனர். ''நாங்கள் இருபது வருடமாக வேலை செய்தும்கூட, வருடத்துக்கு ஐம்பதாயிரம் டாலர் சம்பளம் வாங்க முடியவில்லை. நேற்று வந்த அரை டிராயர் பசங்கள் (இளைஞர்கள்) இங்கு பணத்தைக் குவிக்கிறார்களே..'' என்றனர் அவர்கள். தற்போது இந்த உணர்வும் சேர்ந்து இந்தியர்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியத் துவங்கியுள்ளது. இதையெல்லாம் கண்டு மனம் புழுங்கிப் போயிருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களில் சிலர், ''அமெரிக்கா என்னவோ இவர்கள் பாட்டன் வீட்டுச் சொத்து போல அனுபவிக்கிறார்கள். இது யாருடைய பூமியும் அல்ல. இது மொத்தமும் குடியேறிகளின் நாடுதான். இந்த நாட்டின் வம்சாவளியினரான சிவப்பிந்தியர்களைக் கொன்றுகுவித்தும், தனியாக ஒதுக்கி வைத்தும்தான் இந்த வெள்ளையர்கள் அமெரிக்காவைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். நாம் நேற்று வந்தவர்கள் என்றால், இவர்கள் ஐரோப்பாவில் இருந்து முந்தாநாள் வந்து இடத்தைப் பிடித்தவர் கள்தானே'' என்று பொரும ஆரம்பித்து இருக்கிறார்கள். நன்றி ஜூனியர் விகடன் நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம். ஸ்வாமி